Header Ads

Header Ads

பெல்ஜியத்தில் புதிய உச்சத்தை தொட்ட உயிரிழப்பு

பெல்ஜியத்தில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 496 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவ தொடங்கியதிலிருந்து இதுவரை ஒரே நாளில் பதிவாகியுள்ள அதிகபட்ச உயிரிழப்பு இதுதான். இதன் மூலம், பெல்ஜியத்தில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,019ஆக அதிகரித்துள்ளது.
வெறும் 1.1 கோடி மக்கள் தொகை கொண்ட பெல்ஜியத்தில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மிகப் பெரியதாக தோன்றினாலும், இதில் பாதிக்கும் மேலான உயிரிழப்புகள் மருத்துமனைகள் அல்லாத இடங்களிலும், நோய்த்தொற்று பரவலின் தொடக்க கட்டத்திலும் நிகழ்ந்தவையாக உள்ளன.

No comments:

Powered by Blogger.