Header Ads

Header Ads

லாக்டவுன் மத்தியில் இரவில் திறக்கப்பட்ட நீதிமன்றம்… வெளிநாட்டு காதலியை கரம் பிடித்த நிரஞ்சன்

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும்போது, மெக்ஸிகோ பெண்ணின் திருமணத்திற்காக இரவில் நீதிமன்றம் திறக்கப்பட்ட சம்பவம் ஹரியானாவில் நடைபெற்றுள்ளது.ஹரியாணா மாநிலம் ரோடக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிரஞ்சன் காஷ்யப். மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த பெண் டானா ஜோஹரி ஓலிவெராஸ் என்ற பெண்ணுடன் மொழி கற்கும் செல்போன் செயலி மூலம் நிரஞ்சனுக்கு பழக்கம் ஏற்பட்டது.பின்னர் இது காதலாக மாறியதைத் தொடர்ந்து நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, திருமணம் செய்து கொள்வதற்கு கடந்த பிப்ரவரி 17ம் திகதி இருவரும் விண்ணப்பித்திருந்தனர். இதற்காக மெக்ஸிகோவிலிருந்து பிப்ரவரி 11ம் திகதி டானா இந்தியா வந்துள்ளார்.
பின்பு மார்ச் 18ம் திகதி இவர்களது திருமணம் நடக்கவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்சினையால் திருமணம் தள்ளிப்போயுள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியரை நிரஞ்சன், டானா ஆகியோர் சந்தித்து மனு அளித்து திருமணம் செய்ய அனுமதியைப் பெற்றுள்ளனர். இதுகுறித்து நிரஞ்சன் கூறுகையில், “எனது தோழி மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் சிறப்பு திருமணச் சட்டம் மூலம் மட்டுமே நான் அவரை திருமணம் செய்ய முடியும் என்பதை அறிந்தேன். மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அவரிடம் அனுமதி பெற்று பின்பு ரோடக் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திருமணத்தை நடத்த அனுமதி கிடைத்தது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 13ம் திகதி இரவு 8 மணிக்கு ரோடக் நீதிமன்றம் திறக்கப்பட்டு எங்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்தை நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.