Header Ads

Header Ads

போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், திங்கட்கிழமை மாலையில் வைரஸ் தொற்று தீவிரமடைந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை ஸ்திரமான நிலையில் இருப்பதாக பிரிட்டன் பிரதமர் இல்லமான 10 டெளனிங் ஸ்ட்ரீட்டை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிராணவாயு தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது சிரமமில்லாமல் மூச்சு விடுவதாகவும், அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் எதுவும் தேவைப்படவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


உலக நாடு ஒன்றின் அரசுக்கு தலைமை தாங்குபவர்களில் முதல்முறையாக போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

No comments:

Powered by Blogger.