Header Ads

Header Ads

ஸ்பெயினில் தொடர்ந்து குறையும் உயிரிழப்புகள்

ஸ்பெயினில் தொடர்ந்து நான்காவது நாளாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஸ்பெயினில் இன்று (திங்கட்கிழமை) கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக 637 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது நேற்று 674ஆக இருந்தது. இதன் மூலம் மார்ச் 24 முதலான கடந்த இரண்டு வார காலத்தில் ஸ்பெயினில் பதிவாகும் குறைந்தபட்ச உயிரிழப்பாக இது உள்ளது.
இருப்பினும், இன்று (திங்கட்கிழமை) ஸ்பெயினில் மேலும் 4,273 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் உலகிலேயே இரண்டாவது அதிகபட்ச உயிரிழப்புகளை கண்டுள்ள ஸ்பெயினில் அந்த நோய்த்தொற்றின் தாக்கம் உச்சநிலையை அடைந்துவிட்டதாக அந்த நாட்டு அதிகாரிகள் நம்புகின்றனர்.

No comments:

Powered by Blogger.